வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில், மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் கருணாகரன், அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். கடந்த 30ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை நள்ளிரவில் கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியுள்ளார். கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




