கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் தனது 2வது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். லட்சுமிக்கும் தங்கராஜ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்த கணவர் கொளஞ்சி, மனைவி மற்றும் தங்கராஜ் ஆகியோரை அவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவர்களது தலைகளுடன் வேலூர் சிறையில் சரணடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




