மழைக்காலங்களில் ஏதோ ஒன்றை சூடாக சாப்பிட வாய் நாம நமக்கும் அப்படி இருக்க இதோ அரிசி மாவு போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள் :
* அரிசி மாவு
* சீரகம்
* பூண்டு
* இஞ்சி
* கடலை
* பச்சை மிளகாய்
* வெங்காயம்
* கருவேப்பிலை..
ஒரு மிக்ஸியில் சீரகம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும் அதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும், பின்னர் வெங்காயம் தயிர் உப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் தயாரித்து வைத்திருந்த போண்டாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கிள்ளி போடவும், அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கும் போண்டா பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும், இதோ மலைக்கு இதமான கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி இதனுடன் நீங்கள் சட்டினி அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்..!!




