தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் மாதம் தோறும் 1ஆம் தேதி விடுமுறை வழங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பெண்களில் வாக்குகளை கவருவதற்காகவே, தமிழக அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், பல நாட்களாக பெண்கள் தொடர்ந்து மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், அப்போது ஏன் இந்த முடிவு எடுக்கவில்லை? என கேள்வி எழுந்துள்ளது.




