மெய்யழகன் படத்தின் எமோஷனல் பகிர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் கார்த்திக், நடிகர் கார்த்திக் நடித்துள்ள மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி அவர்களின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..
மெய்யழகன் திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவு குறித்து கார்த்தி நெகிழ்ச்சுடன் எழுதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் மெய்யழகன் படத்தின் கதையை படித்த போது என் மனம் அன்பால் நிறைந்தது அதேபோல் அன்பை நீங்களும் உணர வேண்டும் என விரும்புகிறேன் இது உங்களுக்கு புதிதாக இருக்கும் என்பது தெரியும் என் மீதும் படத்தின் மீதும் அன்பை பொழிந்ததற்கு நன்றி கடன் பற்றுடன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து கார்த்திக் மன்ற ரசிகர்கள் மற்றும் பலரும் கார்த்திக்கின் எமோஷனல் பதிவினை இணையத்தில் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர், கிராமத்து கதையை அழகாக எடுத்துரைத்து அத்தான் உறவு முறையை பற்றியும் அந்த காலத்து நினைவுகளை பற்றியும் இப்படம் முழுவதும் வந்து செல்லும், மெய்யரன் படத்தினை அனைவரும் பார்த்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்..!!



