மொய் வைக்கும் போது ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கத்திற்கு உண்மை காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மொய் கவரின் ஒரு ரூபாய் நாணயம்

திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.

மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன் தெரியுமா?.

ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஆம் அந்தக் காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலுாகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன. அதுவும் சும்மா இல்லை ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை (குண்டு மணி).

அந்த 32 என்பது முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது. எனவே தான் இது “தர்மம்” தவறாது சம்பாதித்த “நாணயம்“ இதை நீங்களும் தர்மம் வழுவாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது.

அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு இருந்தது.

ஆனால் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தினை பிடித்துக் கொண்டன. நோட்டுத் தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.

எனவே ரூபாய் தாளை மொய்பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஒரு உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. ஆதலால் மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் மெய்யான மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தினை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.

அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான் நாணயங்கள் உருவாக்கப்படடன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே தான் நாம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்னு, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது. சுபகாரியங்களில் மொய் செய்வதும் ஒரு நல்ல பழக்கம் தான். அதனால் தான் முன்னோர்கள் இப்படியொரு வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Read Previous

சத்துக்களை அள்ளித்தரும் முந்திரி பால்..!! என்னெ்னன பயன் இருக்குனு தெரியுமா?..

Read Next

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular