மோதிரங்களை அணிவதில் மறைந்துள்ள
சூட்சும ரகசியம்!
மோதிரங்களை விரலில் அணிவதிலும் ஒரு நட்சத்திர சூட்சுமம் மறைந்து உள்ளது.
நமது கை கால்களில் இருக்கும் விரல்களை குறிக்கும் நட்சத்திரம் திருவோணம் ஆகும்.
எப்படி எனில் திருவோணம் என்பது முழக்கோல் என்ற அளவை ஆகும்.
ஒரு முழம் என்பது இரண்டு சாண் ஆகும்.
இந்த சாண் என்பது பெருவிரல் நுணிக்கும் சுட்டுவிரல் நுணிக்கும் இடைப்பட்ட நீட்சியாகும்.
எனவே முழக்கோல் என்ற அளவீட்டு கருவி விரல்களால்தான் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக புலனாகிவிட்டது.
மந்திர ஜெபம் செய்யும் போது
அதன் 108 என்ற எண்ணிக்கையை நாம் விரல் கோடுகளின் துணை கொண்டுதான் எண்ணிக்கை செய்கிறோம்.
அதனால் விரல்களை குறிக்கும் நட்சத்திரம் திருவோணமே!
திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை மஹாவிஷ்ணு ஆவார்.
நாம் விரல்களில் அணியும் மோதிரத்தை குறிப்பது ஆயில்யம் நட்சத்திரமாகும்.
ஆயில்யத்தின் அதிதேவதை ஆதிசேஷன் ஆவார்.
எங்கே திருமால் இருப்பாரோ அங்கேதான் ஆதிசேஷனும் இருப்பார்.
ஏனெனில் ஆதிசேஷன் என்ற நாகம்தான் திருமாலின்
படுக்கை அல்லது ஆசனம்.
ஆதிசேஷனே இந்த உலகை சுமந்தபடி காலச்சக்கரத்தில் வலம் வருகிறார்.
எனவே பூமிக்கும் அதில் வாழும் மக்களுக்கும் ஆதிசேஷனின் அருளும் மஹாவிஷ்ணுவின் அருளும் மிகவும் முதன்மையாக விளங்குகிறது.
அதனால் தான் நாம் விரல் என்ற திருவோணத்தில் ஆயில்யம் என்ற நாகத்தை அணியும் போது பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு நம் விதியும் இயங்க ஆரம்பிக்கிறது.
ஆலய விசேஷங்கள் பிதுர் தர்பணங்கள் செய்யும்போது அந்தணர்கள் தங்கள் கைவிரலில் நாகம் போல் தர்பை புல்லை அணிந்துகொள்வதிலும் இந்த சூட்சுமம் ஒளிந்துள்ளது.




