ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், 2,570 ஜூனியர் பொறியாளர் மற்றும் வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த 2,570 பணியிடங்களுக்கு இன்று (அக்.31) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2025 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க, ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbapply.gov.in-ஐ பார்க்கலாம்.




