ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!

 

 

பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ராகுல் காந்தி நடத்திய போராட்டம், நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளித்த திருமாவளவன், அந்தப் போராட்டத்தை திசைதிருப்பும் முயற்சியாகக் கூற முடியாது என்றார்.

 

மேலும், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் எழுப்பி வரும் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read Previous

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!!

Read Next

BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular