ஷாவ்மி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி, தனது புதிய ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவற்றை இன்று (பிப்., 4) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல்கள் அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதிகளுடன் வருகின்றன. ரெட்மி நோட் 15 ப்ரோவின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் கொண்ட மாடல் ரூ. 29,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ்ஸின் 8ஜிபி ரேம் மாடல் ரூ.37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




