புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குடும்ப வருமானத்தை சரியாக தெரிவிக்க வேண்டும். தவறான வருமானம் தெரிவித்தால், தகுதி இழந்து கார்டு ரத்து செய்யப்படும். ஒரே குடும்பத்துக்கு இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பது சட்டவிரோதம். இதை கண்டறிந்தால் இரண்டும் ரத்து செய்யப்படும். மேலும் 1955 அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற மாற்றங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரேஷனில் கிடைக்கும் பயன்கள் கிடைக்காது.




