முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் அவசியமில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இனி, விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 0-வாக இருந்தாலும், அவர் கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் பரிசீலித்து கடன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களைச் சொல்லி விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது என்றும் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




