மகாலட்சுமியின் அருளைத்தரும் வரலட்சுமி விரதம் இன்று (ஆகஸ்ட் 8) சிறப்பிக்கப்படுகிறது. சௌராஷ்டிர நாட்டின் ராணி சசுந்திரா செல்வப்பேறு பெற்ற ஆணவத்தில் அன்னை மகாலட்சுமியை அவமதித்தார். இதனால் செல்வங்களை இழந்து வருந்தினார். ராணியின் மகள் சாருமதி வரலட்சுமி விரதம் மேற்கொண்டதால் மகிழ்ந்துபோன மகாலட்சுமி அவர்களுக்கான நலனை மீண்டும் அருளினார். பின் ராணி சுசந்திராவும் வரலட்சுமி விரதம் இருந்து வளமுடன் வாழ்ந்தார் என்பது ஐதீகம்.




