வருமான வரி தாக்கல் செய்தவர்கள் தங்களின் பிழைகளை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க நாளை (டிச.31) கடைசி நாளாகும். தவறும்பட்சத்தில் வருமானத்தை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். காலக்கெடு நீட்டிப்பு குறித்து இன்னும் அறிவிப்பு வராததால், அபராதத்தை தவிர்க்க நாளைக்குள் திருத்தங்களை முடிக்க வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.




