கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று (ஜன., 25) போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. விபசார புரோக்கர்கள் பாபு (32), மனோஜ் (30), அம்புரோஸ் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான பெண் புரோக்கரை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்து 9 ஆணுறைகள், பணம் ரூ.500, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.




