வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக இதை மட்டும் செய்தால் போதும்..!!
இந்த காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தான் இந்த வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணால் மட்டும் போதும்.
வெந்நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க பாக்டீரியாக்கள் இருந்து வாய் துர்நாற்றம் குறையும். சாப்பிட்ட பின் சிறிது சோம்பு சாப்பிடுவதன் மூலமும் வாய் துர்நாற்றம் குறைவதோடு ஜீரண சக்தியும் அதிகரிக்கும். துளசி இலையை நன்றாக மென்று உண்ணலாம் இதன் மூலம் வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போகும். ஏலக்காய் பிடித்தவர்கள் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே குளிர்ச்சியான நார் சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும். அடிக்கடி மவுத் பிரஷ்னர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இரவு படுக்கும் முன் கட்டாயம் பல் துலக்க வேண்டும். எனவே கண்டிப்பா இதை எல்லாம் பண்ணுங்க இதை பண்ணுவதன் மூலம் நிரந்தர பலனை நாம் பெற முடியும்.




