விரதம் என்றால் என்ன..?? மற்றும் அதற்கான நன்மைகள் என்னென்ன..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து விரதம் இருக்கும் முறையை பின்பற்றி வருகின்றனர். நம் வாழ்வில் ஏதாவது ஒன்றை வேண்டிக் கொண்டு அதற்காக கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். இந்நிலையில் விரதம் எதற்காக அதனுடைய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
விரதம் இருந்து பழகினால் மனதில் உறுதியும் செயலில் திறமையும் ஆன்மீக சந்தோஷமும் வளரும். விரதத்தினை நம்பி தொடர்ந்து அதை கடைபிடித்து வந்தால் மனதை கட்டுப்படுத்தி நேர்மறை சிந்தனை யையும் தெய்வ பக்தியையும் வளர்க்கும். உடற்பயிற்சிகளால் உடலுக்கு வலிமை ஏற்படுகிறது அதேபோல் விரதத்தால் மனதிற்கு வலிமையும் தெய்வ பக்தியும் வளர்கின்றது.




