தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கான தண்டனை விபரங்கள் இன்று (மே 25) மதியத்திற்குள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.




