விழுப்புரம் தவெக நிர்வாகி ஞானசௌந்தரி கட்சியில் இருந்து நீக்கம்..!!

 

விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த தவெக நிர்வாகி ஞானசௌந்தரி, இன்று (ஜூலை 18) காலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தம்மை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஞானசௌந்தரி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தும் ஊழலற்ற ஆட்சி கொள்கையைப் பின்பற்றியே நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பு: அமைச்சர் ஆனந்த் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளவை. அவை இதுவரை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.

Read Previous

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் விவாதிக்க டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

Read Next

நடிகை மோனிஷா உருக்கமான குற்றச்சாட்டு – ரசிகர்கள் ஆதரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular