அண்ணா தொழிற்சங்க பேரவையில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்தை இபிஎஸ் வழங்க இருக்கிறார். ‘மே’ தினத்தையொட்டி ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தை அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் அண்ணா தொழிற்சங்க பேரவையில் (ATP) உறுப்பினராக உள்ள 171 குடும்பத்தினருக்கு வரும் 4-ம் தேதி இபிஎஸ் வழங்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.




