தருமபுரி அரூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், வரும் 2026 தேர்தலில், அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். 2021 தேர்தல் அறிக்கையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட 525 அறிவிப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, 4 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி கொள்ளை அடித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கூறியுள்ளார்.




