கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




