இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அதனால் கருண் நாயர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 3-வது இடத்தில் சாய் சுதர்சன் தொடருவார் என்றும், ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜூரேல் களமிறங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 வாரங்கள் ரிஷப் பண்ட் ஓய்வில் இருப்பதனால் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.




