“தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக, தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.




