Oplus_131072
இஞ்சி டீ குடிப்பதனால் ஏற்படும் 7 அபாயகரமான தீமைகள்!
இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதனால் இதனை ஆயுர்வேதம் என்று சீன மருத்துவத்தில் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, ஒமட்டல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சியில் அதிகமாகவே உள்ளது.
இஞ்சியில் அதிக அளவு நன்மைகள் இருப்பினும் அதனை அதிக அளவு சாப்பிட்டால் ஏற்படக் கூடிய தீமைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் நமது செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.
இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அறுவைசிகிச்சை செய்யும் முன்பு இஞ்சி டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீ-உடன் எதிர் செயலாற்றும். எனவே, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புண், இரத்தக்கசிவுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒமட்டல், வாந்தி ஏற்படும் அந்த சமயங்களில் இஞ்சி டீ குடிக்க விரும்புவர். அவ்வாறு குடிப்பதனால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்கவும்.
அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது.




