திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதலே, ஓயாமல் திட்டிக் கொண்டிருந்த 90 வயது மாமியர் வெள்ளையம்மாளை, மருமகள் வசந்தா (60) அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று மருமகளை மாமியார் திட்டியதாகவும், இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




