ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனின் எதிர்ப்பால் முடங்கிக் கிடந்த உக்ரைனுக்கான நிதியுதவி, அங்கு புதிய அரசு அமைந்ததால் தற்போது சாத்தியமாகியுள்ளது. இது உக்ரைனுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த நிதி முழுமையானது அல்ல என்றும், ஆயுதத் தொழிற்சாலைகளின் 60 சதவீத திறனை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மின்சாரக் கட்டமைப்பைச் சீரமைக்க கூடுதல் நிதி தேவை என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.




