பிஎஃப் சந்தாதாரர்கள் இனி பணம் எடுக்கவும், கணக்கை மாற்றவும் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை. மென்பொருள் மூலம் கோரிக்கைகளை தானாகவே தீர்க்கும் புதிய முறையை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேலை மாறும்போது பழைய பிஎஃப் தொகை தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றப்படும் மற்றும் 5 லட்சம் வரையிலான முன்பணத்தை வெறும் 3 நாட்களில் பெற முடியும்.




