தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், தண்ணீர் -ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 2, கேசரி பவுடர் – சிறிதளவு, முந்திரி – 10.
செய்முறை: பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து 5 விசில்
வரும்வரை குக்கரில் வேவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் அரைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நெய் சேர்த்து கலவை சுருண்டு வரும்வரை கிளறவும். இத்துடன் கேசரி பவுடர், பொடித்த ஏலக்காய், கோதுமை மாவு சேர்த்து அல்வா பதம் வந்ததும் முந்திரி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.




