கல்வி உதவித்தொகை பெற EMIS பதிவுகள் கட்டாயம்: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

 

 

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை தடையின்றி பெறும் வகையில், EMIS (Education Management Information System) தளத்தில் மாணவர்களின் விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், பெற்றோரின் வருமான விவரம் மற்றும் சாதி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவரங்கள் முழுமையாகவும் துல்லியமாகவும் பதிவுசெய்யப்பட்டால் மட்டுமே, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

எனவே, தகுதியான மாணவர்கள் உதவித்தொகையை காலதாமதமின்றி பெறுவதற்காக, தேவையான விவரங்களை விரைந்து பதிவேற்றும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

மின்சாரம் இல்லாத வீட்டில் படித்து நீட் தேர்ச்சி: அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கோரி முதலமைச்சருக்கு மாணவி உருக்கமான கோரிக்கை..!!

Read Next

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ல்: அதிக காலிப்பணியிடங்கள் இடம்பெற வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular