குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 11-ல்: அதிக காலிப்பணியிடங்கள் இடம்பெற வாய்ப்பு..!!

 

 

ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இதனால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் பின்பற்றி, தேர்வுக்கான தயாரிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Read Previous

கல்வி உதவித்தொகை பெற EMIS பதிவுகள் கட்டாயம்: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

Read Next

வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular