* 4 பிரெட் துண்டுகளை நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பிரெட் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும்.
* மீண்டும் ஒரு வாணலியில் முக்கால் கப் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரைந்த பிறகு பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். அதன் பிறகு கால் கப் பால் சேர்த்துக் கிளறவும்.
* 3 டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோவா உடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளுடன் இந்த கோவாவைச் சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
* ஒரு தாளிப்புக் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சிறிதளவு பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.
* தாளித்த கலவையை அல்வா உடன் சேர்த்து, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறினால், பிரெட் அல்வா ரெடி!




