“முதல்வரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல.. அள்ளி கொடுப்பவை!” – சட்டப்பேரவையில் சபாநாயகர்..!!

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) நடைபெற்ற கூட்டத்தொடரில், தனக்கு வண்டி, வாகன வசதி இல்லை என விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி கோரிக்கை விடுத்தார்.

 

இதற்கு பதிலளித்த சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

மேலும், “முதலமைச்சரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல.. அள்ளி கொடுப்பவை. கட்டாயம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என சபாநாயகர் உறுதியளித்தார்.

 

சட்டப்பேரவையில் சபாநாயகர் கூறிய இந்த கருத்து உறுப்பினர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

Read Previous

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

Read Next

ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular