மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் சட்டப்பேரவையில் பேசினார். விவசாயிகளுக்காக அவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும், விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “2009-ஆம் ஆண்டிலேயே மேகமலையை காப்புக்காடாக அறிவிப்பதை தடுத்திருக்க வேண்டும்” என்றார்.
மேலும், மேகமலை விவகாரத்தை முந்தைய அரசுகள் முறையாக கையாளவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.




