அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய க்ளோத் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “சமரசம் செய்ய முடியாத வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கை சமரசத் தீர்வுக்கு அனுப்பியதற்கான உத்தரவு நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டது.




