கூவம் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து, அதன் நீர்வளத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக MLA சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
மக்கள் தங்களது பரம்பரை சொத்துகளை பாதுகாப்பதற்காக எப்படி போராடுகிறார்களோ, அதேபோல் நம் கையை விட்டு மெல்ல அழிந்து வரும் இயற்கை நீர்வளங்களையும் பாதுகாப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று எனக் குறிப்பிட்ட சௌமியா அன்புமணி, அதன் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.




