CJP போராட்டத் தடை வாபஸ்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வெற்றி..!!

 

CJP போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது, மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 17, 2026 அன்று கல்லூரி கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர் சமூகத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

கல்வி வளாகங்களில் மாணவர்களின் சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வை கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. எதிர்ப்புகளுக்குப் பிறகு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத வகையில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

 

Read Previous

பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? வெளியான வதந்திகளுக்கு X பதிவு மூலம் முற்றுப்புள்ளி..!!

Read Next

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவிப்பு: சட்டப்பேரவையில் சிரிப்பலை கிளப்பிய தவெக உறுப்பினர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular