ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் அடுத்தடுத்து 2 வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 22 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் அருகே ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் கப்பலை ஆயுதம் ஏந்திய 6 கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியதாகவும், அதில் 16 இந்தியர்கள் உட்பட 20 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சோமாலியாவின் புன்ட்லேண்ட் பகுதியில் ‘M/V LUTUF’ என்ற சரக்குக் கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாகவும், அதில் 6 இந்தியர்கள் உட்பட 10 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச கடற்படைகள் இணைந்து மாலுமிகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.




