தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாட்டில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஆகஸ்ட் 6) கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.




