காது சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
எந்த வழி வந்தாலும் தாங்கிக்கலாம் இந்த காது வலி வந்தா தாங்கிக்கவே முடியாது என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். காது வலி என்ன அவ்வளவு பெரிய வலியா என்று கேட்பவர்களுக்கு ஒன்று என்னவென்றால் அடிபட்டவனுக்கு தான் தெரியும். வலியும் வேதனையும் அவ்வாறு காது பிரச்சனை என்பது மிகவும் பெரிய பிரச்சனை. காது பிரச்சனையால் கடைசி வரை எனக்கு காது கேட்காமல் கூட போய்விட்டது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சிறிதாக ஏதேனும் வலியோ இல்லை காது சம்பந்தமான பிரச்சினைகளை வரும்போது உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும். இந்நிலையில் வீட்டிலேயே காது பிரச்சனைக்கு மருத்துவம் செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
துளசி சாறு மற்றும் கரிசாலை சாறு சம அளவு கலந்து காதில் விட காது வலி மற்றும் காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். அதுமட்டுமின்றி தூதுவளை கசாயம் சாப்பிட்டு வர காதுமந்தம் நீங்கும் மற்றும் மிளகு வெள்ளை பூண்டை தட்டி துணியில் முடிந்து காதில் பிழிய காதடைப்பு குணமாகும். எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு காதில் விட வலி மற்றும் குடைச்சல் தீரும். தூதுவளை இலை சாறு இரண்டு சொட்டு காதில் விட இரைச்சல் நீங்கும்.




