கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா எப்படி செய்யணும்னு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

கடப்பா செய்வது எப்படி….

செய்முறை

உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து, தோலுரித்து சிறிய சிறிய துண்டாக வெட்டிக்கொள்ளவும். துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் கசகசாவை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்த்தூள், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்குடன் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கிளரி ஒரு கொதி விடவும். சாம்பார் பதம் வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விடவும். சூடான சுவையான கடப்பா தயார்.

 

Read Previous

பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

Read Next

தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular