அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கொறடா தரப்பில் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சபாநாயகர் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என அதிமுக கொறடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.




