இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி எனவும் புதிய முறை செப்.22ல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. பால், பிரட், வெண்ணெய், நெய்க்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும். விவசாய உபகரணங்கள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.




