அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி… பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறி வரும் நிலையிலும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக செயல்பட்டு வருவதற்கு பின்னால் அரசியல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகள் 59 ஆகவும், சட்டமன்றத் தொகுதிகள் 350 ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தும் வகையில், தற்போதே கீழ்மட்ட அளவில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தி, புதிய தொகுதிகளுக்கேற்ப வலுவான அடித்தளத்தை உருவாக்கி, அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




