ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம்…எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம்..!! என்பதை உணர வைத்த பதிவு..!!

Oplus_131072

வாழ்க்கை ஒரு பம்பரம் போல்

நிரந்தரமே இல்லாத உலகத்தில்…
பிறருக்கு ‘உதாரணமாக’ வாழாவிட்டாலும் பரவாயில்லை,
பிறர் ‘உதாசீனப்’ படுத்தும் அளவுக்கு ஒரு வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துவிடவேக்கூடாது..

உன்னிடம் ஒன்றுமில்லாதபோது ‘உதவாக்கரை’ என்று சொன்ன இந்த உலகம், உன்னிடம் காசு பணம் வந்ததும் ‘புது அக்கறை’ காட்டும்.

தோல்வி என்பது பங்குகொண்டு தோற்பது அல்ல
பங்குகொள்ளாமலே பயந்து பின்வாங்கி நிற்பது…

வளரும்போது பெற்றோர்கள் நம்மை குழந்தையாக பார்த்துக்கொள்வதும்
வளர்ந்த பின்னர் பெற்றோர்களை நாம் குழந்தையாக பார்த்துக்கொள்வதும் தான் #வாழ்க்கை.

நிரந்தரமே இல்லாத உலகத்தில்… மனிதர்களை தரம் தரமாக பிரித்து வாழ்கிறார்கள் மனிதர்கள்…!
“தகுதி” பார்த்து மட்டும் யாரிடமும் பழகாதே…?

“இறந்த” பிறகு எல்லாத்தகுதி உடையவனுக்கும்
“பிணம்” என்றுதான் பெயர்…!

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம்…எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம்..

Read Previous

வாழைப்பழத்தில் அல்வா செய்ய முடியும்னு சொன்னா நம்புவீங்களா..??

Read Next

காசியை விட பல மடங்கு புண்ணியம் தரும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular