ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார், நாங்கஹார் பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 250 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.




