தேவையான பொருட்கள்👇
🌺அரை கிலோ மட்டன்
🌺அரை கிலோ சீரக சம்பா அரிசி
🌺நாலு பெரிய வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
🌺நாலு தக்காளி
🌺மூன்றுபச்சை மிளகாய்
🌺ஐந்து காய்ந்த மிளகாய்
🌺ரெண்டு இன்ச் இஞ்சி
🌺15 பூண்டு
🌺நாலு பட்டை
🌺எட்டு இலவங்கம்
🌺நாலு ஏலக்காய்
🌺அரை எலுமிச்சை சாறு
🌺இரண்டு ஸ்பூன் தயிர்
🌺எண்ணெய்
🌺முந்திரி
🌺நெய்
🌺உப்பு
🌺புதினா
🌺கொத்தமல்லி இலை
செய்முறை 👇
📍முதலில் ஒரு பவுலி இரண்டு பட்டை நாலு லவங்கம் 2 ஏலக்காய் வரமிளகாய் ஐந்து முந்திரி சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
📍ஊற வைத்திருந்த வர மிளகாய் பட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டு 3 தக்காளி பழம் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
📍குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் இரண்டு ஏலக்காய், இரண்டு பட்டை, நாலு இலவங்கம், நறுக்கிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
📍பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
📍வதங்கிய பின், அரை கிலோ மட்டன் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும் ஐந்து விசில் வைத்து மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
📍பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த சீரக சம்பா அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்.
📍இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்..




