தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கிடையே, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக தகவல் பரவியது. ஆனால், எடப்பாடியை சந்தித்தது தவறான தகவல் என தனியரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.




