நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மற்றும் இருமல் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் இந்த குழந்தைகள் சிரமப்பட்டு வருவார்கள். இதனை உடனடியாக மாற்றிக்கொள்ள இதை உபயோகித்து பாருங்கள்.
ஒரு பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பின் வெற்றிலையில் தடவிக் கொள்ளவும். இந்த வெற்றிலையை நல்லெண்ணெய் ஊற்றி விளக்கில் கை பொறுக்கும் அளவிற்கு சூடு வரும் வரை நன்றாக வாட்டி எடுக்கவும்.
குழந்தைகள் சூடு பொறுக்கும் வரை மட்டுமே இது இருக்க வேண்டும். இந்த வெற்றிலையை இரவில் மட்டும் மூன்று நாட்கள் குழந்தை நெஞ்சில் வைத்து வந்தால் இருமல் மற்றும் சளி உடனடியாக வெளியேறிவிடும். மூன்று மாதங்கள் வயதான குழந்தைகளுக்கு இதை நிச்சயமாக பின்பற்றலாம். பல பேருக்கு ஒரே இரவிலேயே சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வருவதை நம்மால் காண முடியும்.




