இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சூழலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு இன்று (மார்ச்.11) உணவக உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி மாற்று ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.




